Friday, 26 June 2009




மறந்து போகாதோ...மறைந்து போகாதோ...!

அலறலிலும்
ஓசை
கேட்கக் கூடாதென்ற
அச்சம் !...

அறிய பிறவியான மானுடம்
சல்லிக் காசு பெருமதியற்றதாய்
முடியுமென்ற இருண்டகாலம்
என்னும் தொடராய்!
போதும்....! போதும்....!
வாழ்வின் நிம்மதியை
உறவுகளின் உயிரை
பெண்களின் கற்பை
பறிக்கும் இந்நாட்கள்
மறைந்து போகாதோ.......?
மறந்து போகாதோ ........?
எம் வாழ்வைவிட்டு ......!

Friday, 19 June 2009

தொலை வானில்
பட்சியொன்று
சிறகடித்ததை
கண்ணுற்ற
உன் விழிகள்
இணையானது
துணையானது!
சஞ்சரிக்கிறேன் நான்
உன் சிறகுகளுடன்
நீண்ட நெடு வானில்.....!
வாழ்வின் வலிகள்
மறந்து போக
வருகிறாயா எங்காவது
தோப்போரம் இளைப்பாறலாம்
வாழ்வு முழுக்க .......!!!

Thursday, 18 June 2009

விடியா இரவுகள் !


றக்கம்
தொலைந்த இரவுகளின்
சோகச்சுமைகளாய்
துவண்டு போயிருந்த வானம்!
கவிந்த இருளில்
விட்டில் பூச்சிகளின்
வழி தெரியாப் போராட்டம் !
இதமான தென்றலின்
இனிய வருடலில்
இலைகளின் மெல்லிய
சல சலப்பு
நிசப்தத்தின் எதிரொலி
இது,
மயான பூமி
துஷ்டர்களை சுமந்ததால்
மட்டுமல்ல
துயரங்களின் விடிவெள்ளியாய்
இருந்ததாலும் கூடத்தான்!
வெண்புறா முகத்தில்
குருதி தெளித்து
உறக்கம் கலைத்த
கல்லறைப் பூமியின்
இருண்ட பொழுதுகள்
விடியலை தேடிய
பூபாளங்களும் திசை
மாறிய பறவைகளாய்
துயரும் கண்ணீரும்
நித்தியமென்றல்
விடிய இரவுகள்
எமக்கினி துயர் துடைக்கட்டும்!

Monday, 15 June 2009

பல்கலை நினைவுகளோடு .....!


தூரத்து உறவுகளாகி விட்ட
எம் நினைவுப் புஷ்பங்கள்
மலரும் போதெல்லாம்
சுகந்தம் வீசும் இதயமெங்கும்!

துயரங்களை
நெஞ்சுள் புதைத்து
சுதந்திர வானில்
வட்டமிட்டு திரிந்த
வானம் பாடிகள் !
இயற்கை அன்னையின்
இனிய சிருஷ்டியில்
கொள்ளை கொள்ளும்
மலைச்சாரல்கள் !
எட்டுத்திசைப் பறவைகளின்
வேடந்தாங்கலாய்
கல கலக்கும் விடுதிகள்
ஆனந்தமாய் !
சில்லறை சண்டைகள்
சிநேகமான உறவுகள்
துரோகக் கும்பல்கள்
நட்பின் ஆழங்கள்
எத்தனை முகங்களின்
அறிமுக தலம் !
பிரிவின் வலி ரணமாய் சுட
கண்ணீர் துளிகளால்
புனிதப்படும் நட்பு மட்டுமல்ல
காதலும் கூடத்தான் !

உணர்வுகள் சோர்ந்தாலும்
மலர்த்த முகத்துடன்
கால்கள் நடை போடும்
எம் இலட்சியப் பயணம் நோக்கி!